தேசியம்
செய்திகள்

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை: ஒன்பது சந்தேக நபர்கள் – மொத்தம் 19 குற்றச்சாட்டுகள்!

கடந்த ஆண்டு Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒன்பது சந்தேக நபர்கள் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டனர்.

22.5 மில்லியன் டொலர் Pearson தங்கக் கொள்ளையில் பலர் கைது செய்யப்பட்டதுடன், 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்த கொள்ளை சம்பவம் நிகழ்ந்த  ஓராண்டு நிறைவையொட்டி புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Peel பிராந்திய காவல்துறையினர் இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

கனடிய வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய தங்கக் கொள்ளை இதுவென காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவர் Air Canada ஊழியர்கள் என Peel பிராந்திய காவல்துறை தலைவர் நிஷான் துரையப்பா அறிவித்தார்.

இவர்கள் இருவரும் இந்த திருட்டில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தேடப்பட்டு வருகிறார்.

இந்த திருட்டில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தம் 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாவும், இதுவரை கைது செய்யப்படாத சந்தேக நபர்களை கைது செய்ய கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள்;

  • Georgetown நகரை சேர்ந்த 43 வயதான Ammad Chaudhary,
  • Oakville நகரை சேர்ந்த 40 வயதான Amit Jalota,
  • Brampton நகரை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம்,
  • Toronto நகரை சேர்ந்த 37 வயதான Ali Raza,
  • Brampton நகரை சேர்ந்த 54 வயதான Parmpal Sidhu.

இந்த நபர்கள் நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

    

பின்வரும் நபர்களுக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது;

  • Brampton நகரை சேர்ந்த 31 வயதான Simran Preet Panesar,
  • Mississauga நகரை சேர்ந்த 42 வயதான Arsalan Chaudhary,
  • Brampton நகரை சேர்ந்த 36 வயதான Archit Grover.

இவர்களை சட்ட ஆலோசகரை நாடுமாறும் காவல்துறையில் சரணடையுமாறும் புலனாய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தவிரவும் Brampton நகரை சேர்ந்த  25 வயதான Durante King-Mclean என்பவரின் கைதுக்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் இவர் தற்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

April 17, 2023 அன்று Air Canada வளாகத்தில் இருந்து சுமார் 20 மில்லியன் டொலர் மதிப்புள்ள 6,600 தூய தங்கக் கட்டிகள், சுமார் 2.5 மில்லியன் டொலர் மதிப்பிலான பல்வேறு வெளிநாட்டு பணம் திருடப்பட்டது.

சூரிச்சில் இருந்து விமானத்தில் வந்த இந்த தங்கம், பணம் திருட்டு குறித்த இரகசிய, கூட்டு விசாரணை “Project 24K” என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் குற்றம் சாட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என கருதப்படுகிறது.

Related posts

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

நாடாளுமன்ற உறுப்பினர் Jim Carr மரணம்

Lankathas Pathmanathan

அதிகரித்த வெப்பம் காரணமாக British Colombiaவில் 486 திடீர் மரணங்கள்!

Gaya Raja

Leave a Comment