தேசியம்
செய்திகள்

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு பயண எச்சரிக்கை

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கான பயண எச்சரிக்கையை கனடா வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் Charles முடிசூட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறுகிறது.

இந்த முடிசூட்டு விழா காலத்தில் இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் கனேடியர்கள் அதிகரித்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் தவிர வேறு இடங்களிலும் தாக்குதல்கள்  நிகழலாம் என கனடிய அரசின் பயண எச்சரிக்கை குறிப்பிடுகிறது.

இங்கிலாந்து மன்னர் Charles முடிசூட்டு விழாவில் பிரதமர் Justin Trudeau கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

இரண்டாவது COVID booster தடுப்பூசிகளை வழங்க மாகாணங்கள் தயாராக வேண்டும்: NACI

Lankathas Pathmanathan

மீண்டும் உயரும் பாலின் விலை

பணவீக்கம் 30 ஆண்டுகளில் இல்லாத உயர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment