தேசியம்
செய்திகள்

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவது குறித்த ஆலோசனை பொறிமுறை ஆரம்பம்!

தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்கும் ஆலோசனை பொறிமுறை ஒன்றை சமூக மைய இயக்குநர் குழு ஆரம்பித்துள்ளது.

இதற்காக இந்த மாதம் ஒரு புதிய இணைய மூலம் கலந்தாய்வு முன்னெடுக்கப்படுகிறது.

தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு இந்தத் திட்டம் குறித்த நிலவர அறிவிப்பை திங்கட்கிழமை வெளியிட்டது.

அதிகரித்த கட்டுமான வரவு செலவுத் திட்டத்துடன், தமிழ் சமூக மையத்தின் திட்டத்தை எவ்வாறு முன்னோக்கி நகர்த்துவது என்பதைத் தீர்மானிக்க இணைய மூலம் கலந்தாய்வு எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

தவிரவும் எதிர்வரும் 21ஆம் திகதி ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவும் தமிழ் சமூக மையத்தின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளது.

Related posts

உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசாங்கத்தை மாகாண முதல்வர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

வதிவிடப் பாடசாலைகளின் தேடல்களுக்கு மேலதிக நிதியுதவி அறிவிப்பு!

Gaya Raja

மீண்டும் அதிகரிக்கும் வட்டி விகிதம்!

Lankathas Pathmanathan

Leave a Comment