தேசியம்
செய்திகள்

மில்லியன் டொலர்கள் நிதி மோசடியை எதிர்கொள்ளும் தமிழ் குடும்பம்

ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் Torontoவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது  RCMPயினால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு December மாதம் ஆரம்பமான விசாரணையின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிதி மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் கடந்த 19ஆம் திகதி கஜீபன் நடராஜா, சின்னத்தம்பி நடராஜா, கருணாதேவி நடராஜா ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் மோசடியாக பெறப்பட்ட  நிதி குறித்து இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகின.

இந்தக் கடன்களில் பல, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன.

இவை ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட மோசடி ஆவணங்கள் கொண்ட விண்ணப்பங்களாகும் என விசாரணைகளில் தெரிய வருகிறது.

இந்த குற்றசாட்டு குறித்து RCMP வெளியிட்ட அறிக்கை

https://www.rcmp-grc.gc.ca/en/news/2022/rcmp-uncovers-complex-fraud-scheme-leading-charges-toronto-family?fbclid=IwAR1AMlECZOeQFPHFWNec5AstBPMijGNlzKr8xXNbCvVnlFKi0atD1tH_I3o

Related posts

Ontario தேர்தல் வரலாற்றில் இம்முறை மிகக் குறைந்த பேர் வாக்காளித்தனர்

Lankathas Pathmanathan

கனடிய இறையாண்மைக்கு ஆதரவாக நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள்!

Lankathas Pathmanathan

Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment