தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஆரம்பமானது தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம்

Ontario மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் வியாழக்கிழமை (12) முதல் ஆரம்பமாகிறது.

வியாழன் முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை தமிழ் இனப்படுகொலை வாரமாக Ontario மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் அதற்கான சட்டமூலம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

Scarborough—Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் இந்த சட்டமூலத்தை முன்மொழிந்திருந்தார்.

தமிழின படுகொலை கல்வி வாரம் இலங்கைத்தீவில் தமிழர்கள் எதிர்கொண்ட இனப்படுகொலையின் நீடித்த படிப்பினைகள் குறித்து சிந்திக்கவும், ஏனையவர்களுக்கு கற்பிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

Related posts

கனடிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Venezuela நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் கனடியர்கள் இல்லை: வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan

சீனாவின் COVID நிலை குறித்து அவதானித்து வரும் கனடிய பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment