தேசியம்
செய்திகள்

சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும்: பிரதமர் Trudeau

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் சட்டவிரோத எதிர்ப்பு நடவடிக்கைகள்  முடிவுக்கு வர வேண்டும் என பிரதமர் Justin Trudeau கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் எதிர்ப்பு போராட்டம்  விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Trudeau தெரிவித்தார்.

ஆனாலும் வன்முறை விளைவுகள் குறித்த சாத்தியக் கூறுகளை  மேற்கோள் காட்டி, எப்படி அல்லது எப்போது ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றிய விபரங்களை பிரதமர் வெளியிடவில்லை.

அதேவேளை கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை போக்கு வரத்து தடைகள் தொடர அனுமதிக்க முடியாது எனவும் Trudeau தெரிவித்தார்

இந்த விடயம் குறித்து வெள்ளியன்று அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனுக்கும் பிரதமர் Trudeauவுக்கும் இடையில் உரையாடல் ஒன்று நிகழ்ந்தது.

Related posts

Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!

Gaya Raja

Ontario மாகாண அமைச்சர் தீடீர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை தேர்தலில் தமிழ் பெண் வேட்பாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment