தேசியம்
செய்திகள்

COVID நடவடிக்கைகளில் மாற்றங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

கனடாவின் எல்லைகளில் COVID தொற்று நடவடிக்கைகளில் மாற்றங்களை மத்திய அரசாங்கம் அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது.

சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வெள்ளிக்கிழமை (11) இந்த தகவலை  வெளியிட்டார்.

அத்தியாவசியமற்ற அனைத்து சர்வதேச பயணங்களையும் தவிர்க்குமாறு தற்போது அரசாங்கம்  அறிவுறுத்துகிறது.

இந்த நிலையில் தொற்றை நிர்வகிப்பதற்கான நிலையான திட்டங்களை எதிர்பார்ப்பதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

COVID காரணமாக சராசரியாக நாளாந்தம் 130 மரணங்கள் கனடாவில் பதிவாகின்றன.

ஒவ்வொரு நாளும் சுமார் 8,700 பேர் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தவிரவும் 1,000 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்  என கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.

Related posts

Ontarioவில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்!

Gaya Raja

Ontario அரசாங்கம் மில்லியன் கணக்கான COVID தடுப்பூசிகளை வீணடித்துள்ளது!

Lankathas Pathmanathan

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja

Leave a Comment