தேசியம்
செய்திகள்

சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒப்பந்தம் அவசியம்: பிரதமர்

கடுமையான சேவை இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு ஒரு ஒப்பந்தத்தை விரைவாக எட்ட வேண்டிய அவசியத்தை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்.

கனடாவின் பொதுச் சேவை கூட்டணியின் வேலை நிறுத்தம் புதன்கிழமை (19) ஆரம்பமான நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

இந்த வேலை நிறுத்தத்தை தவிர்ப்பதற்கு நேற்று அரசாங்கம் ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்ததாக பிரதமர் கூறினார்.

ஆனால் பொது சேவை கூட்டணி அதற்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்கவில்லை என Justin Trudeau தெரிவித்தார்.

கனேடியர்களுக்கு மத்திய அரசாங்கத்திடம் இருந்து அவர்களுக்குத் தேவையான சேவைகளைப் பெற உரிமை உள்ளது எனவும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

Related posts

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan

இன்று Ontario மாகாணத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

இலங்கையில் மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வது குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

Leave a Comment