தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு

“Freedom Convoy” பேரணியின் பிரதான ஒருங்கமைப்பாளர் கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது வங்கிக் கணக்குகளை முடக்க அவசரச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக Chris Barber இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

COVID கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனது  உரிமைகளை மீறும் நடவடிக்கை இதுவென அவர் வாதிடுகின்றார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒரு அதிகார துஷ்பிரயோகம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவர் Saskatoonனில் உள்ள நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு கோரிக்கை அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்

Chris Barber, தென்மேற்கு Saskatchewanனில் உள்ள ஒரு  trucking நிறுவனத்தின் உரிமையாளராவார்.

Related posts

முதற்குடியினர் குழந்தைகள் நல இழப்பீடு ஒப்பந்தத்தை வெளியிட்ட அரசாங்கம்

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் வரிகளை தவிர்க்க கனடாவுக்கு வழியுண்டு?

Lankathas Pathmanathan

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை: Statement by Gary Anandasangaree, Canadian Member of Parliament, on First Anniversary of Easter Sunday Attacks in Sri Lanka:

Lankathas Pathmanathan

Leave a Comment