தேசியம்
செய்திகள்

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கையொன்று வெளியிகியுள்ளது.

இரண்டாவது வாரமாக எதிர்ப்பு போராட்டங்கள் Quebec சட்டமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த போராட்டங்களில் பங்கேற்பவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டு சட்டமன்றத்தை தாக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது.

தேசிய சட்டமன்றத்திற்கு எதிராக வன்முறைச் செயல்களை சிலர் திட்டமிடுவதாக முதல்வர் François Legault கூறினார்.

இதனை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளின் ஆதரவை முதல்வர் கோரியுள்ளார்.

காவல்துறையினர் இந்த வன்முறை அச்சுறுத்தல்களை தீவிரமாக கருதி கையாள்வதாக மாகாண பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

Related posts

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

புதுப்பிக்கப்பட்ட Moderna COVID தடுப்பூசிக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan

ரஷ்யாவிற்கு எதிராக கனடா பொருளாதார தடை

Lankathas Pathmanathan

Leave a Comment