November 15, 2025
தேசியம்
செய்திகள்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகளை அனைத்து தரப்பினரும் கண்டிக்க வேண்டும்

சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் ஆகியவற்றைக் கண்டிக்க அனைத்து தரப்பினரையும் பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் வியாழக்கிழமை மாலை பிரதமர் Trudeau ஆலோசனை கூட்டமொன்றை நடத்தினார்.

இதில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள், முற்றுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த முற்றுகைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை பிரதமர் எதிர்க்கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு தரப்பினரும் இந்த சட்டவிரோத செயல்களை கண்டனம் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் இந்த சந்திப்பில் கூறினார்.

Trudeau, எதிர்க்கட்சித் தலைவரும் Conservative கட்சியின் இடைக்கால தலைவருமான Candice Bergen, Bloc Quebecois தலைவர் Yves-Francois Blanchet, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோருக்கு இடையே தொலை தொடர்பு சந்திப்பாக இந்த உரையாடல் நிகழ்ந்தது.

Related posts

கனடிய படையில் சேவையாற்றியவர்களுக்கு உதவும் முகமாக 11 ஆயிரம் டொலர்களை திரட்டிய Connecting GTA

Lankathas Pathmanathan

Markham நகரசபை இடைத் தேர்தலில் கிள்ளி செல்லையா!

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கோரும் பிரேரணை நிறைவேறியது

Lankathas Pathmanathan

Leave a Comment