சுங்க வரி ஒப்பந்தம் தொடர்பாக கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நிர்ணயித்துள்ள புதிய காலக்கெடு நெருங்கும் நிலையில், சுங்க வரி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.
எனினும், கனடாவும் அமெரிக்காவும் இதில் இன்னும் பரந்த கருத்து வேறுபாட்டை கொண்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த வாரம் முதல் பல்வேறு கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கையெழுத்திட்டார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கனடிய அதிகாரிகள் தங்கள் அமெரிக்க இணையான அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக, இரு தரப்பினருக்கும் இடையில் முக்கிய கருத்து வேறுபாடுகள் இன்னும் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் முக்கிய கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், சுங்க வரி தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என கனடிய மத்திய அரசு நம்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்து வெள்ளிக்கிழமை (14) மாகாண, பிரதேச வர்த்தக அமைச்சர்கள், கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே விளக்கமளித்தார்.
இந்த நிலையில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளில் இன்னும் பெரிய இடைவெளி இருப்பதாக Québec மாகாணத்தின் பொருளாதார அமைச்சர் Bernard Drainville கூறினார்.
பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் “இன்னும் வெகுவாக வேறுபட்டுள்ளன” என முன்னாள் Conservative கட்சித் தலைவரும், பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான Erin O’Toole குறிப்பிட்டார்.
