பெற்றோர், தாத்தா, பாட்டியை கனடாவுக்கு அழைத்து வர விரும்பும் நபர்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதை கனடிய அரசாங்கம் நிறுத்தி வைக்கிறது.
குடும்பங்களை ஒன்றிணைப்பதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டியை நிரந்தரக் குடியேறிகளாக கனடாவுக்கு அழைத்து வர விரும்பும் நபர்களிடமிருந்து, இந்த ஆண்டு எந்த ஒரு புதிய விண்ணப்பத்தையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாது என தெரியவருகிறது.
இந்த மாற்றம் குறிப்பிட்ட திட்டத்தை பொறுப்புடன் நிர்வகிப்பதற்கும், விண்ணப்பங்கள் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்குமான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படுவதாக குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.
புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது குறித்த இடைநிறுத்தம் அடுத்த அறிவிப்பு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கான ஆர்வம் தொடர்ந்து அதிகமாக உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் ஏற்கனவே 60,500 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த விண்ணப்பங்களின் செயல்முறைக்கான காத்திருப்பு காலம் சுமார் 33 மாதங்கள் ஆகும்.
Quebec மாகாணத்தில் இது 66 மாதங்கள் வரை உள்ளது.
2026, 2027-ஆம் ஆண்டுகளில் நிரந்தர வதிவிட உரிமையை 15,000 பேர் வரை பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கும் திட்டத்தை இந்த இடைநிறுத்தம் மாற்றாது என குடியேற்றத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 2020-ல் ஆரம்பிக்கப்பட்டது.
கனடாவுக்கு தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டியை அழைத்து வர, 200,000-க்கும் மேற்பட்ட நிரந்தரக் குடியேறிகளும், குடிமக்களும் ஆர்வம் தெரிவித்தபோது
இவ்வாறு ஆர்வம் தெரிவித்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி விண்ணப்பிக்க தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
