தேசியம்
செய்திகள்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது.

இவர்களில் Ontarioவில் 319, Quebecகில் 207 பேர் மாகாண ரீதியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறினர்

Ontarioவில்   அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள  COVID தொடர்பான நோயாளிகளின் ஏழு நாள் சராசரி 252 என சுகாதார அமைச்சர் Christine Elliot தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல நாட்களாக, மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Related posts

2024ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை!

Gaya Raja

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான “பிளவுபட்டு வரும்” உறவை மீட்டெடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan

Ontarioவின் அனைத்து பகுதிகளும் நத்தார் தினத்திற்கு முந்தைய நாள் முதல் முழுமையாக மூடப்படும்!

Lankathas Pathmanathan

Leave a Comment