கடந்த மாத பணவீக்கம் 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வால் இந்த அதிகரிப்பு பதிவானது.
இது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமான விலை உயர்வை குறிக்கிறது.
ஈரான் யுத்தம் காரணமாக அதிகரித்த எரிவாயு விலைகள், April மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதத்தை 2.8 சதவீதமாக உயர்த்தியுள்ளன என கனடிய கனடா புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தது.
மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தடைபட்டதால், கடந்த மாதம் எரிபொருள் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 28.6 சதவீதம் அதிகரித்து, எரிபொருள் நிலையங்களில் விலைகள் உயர்ந்ததாக புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
April மாதத்தின் நடுவில் எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு நிறுத்தி வைத்த நடவடிக்கை, விலை உயர்வைத் தணிக்க உதவியதாக புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டது.
புள்ளிவிபரத் திணைக்களத்தின் April மாத அறிக்கை, March மாதத்தின் 2.4 சதவீத பணவீக்க விகிதத்தில் இருந்து ஒரு உயர்வைச் சுட்டிக்காட்டுகிறது.
April மாத புள்ளிவிவரங்கள், May 2024-க்குப் பின்னர் பதிவான மிக உயர்ந்த வருடாந்த பணவீக்க விகிதத்தை குறிக்கின்றன.
June 10 -ஆம் திகதி கனடிய மத்திய வங்கி தனது அடுத்த வட்டி விகித முடிவை அறிவிப்பதற்கு முன்னர், பணவீக்க தரவுகளை இறுதியாக நோக்கும் நிகழ்வாக இந்த April மாதப் புள்ளிவிவரங்கள் அமைகின்றன.
மத்திய வங்கி தனது கடந்த நான்கு முடிவுகளில் கொள்கை வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக நிலையாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
