இனப்படுகொலையாளர்களுக்கு கனடா புகலிடமாக இருக்க முடியாது என Conservative கட்சி தெரிவித்தது.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் ராஜபக்ச அரசு தமது குற்றங்களுக்காக நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என Pierre Poilievre குறிப்பிட்டார்.
இந்த இனப்படுகொலையில் பலியானவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் அதேவேளை நீதிக்கான எமது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
