Alberta மாகாணத்தின் பிரிவினைவாத இயக்கம் குறித்த கரிசனை மன்னர் மூன்றாம் சார்லசுடன் நடந்த சந்திப்பில் எழுப்பப்பட்டது.
Alberta முதல் குடிகளின்தலைவர்கள் மன்னர் மூன்றாம் சார்லசுடன் புதன்கிழமை (11) சந்திப்பொன்றை முன்னெடுத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் Buckingham அரண்மனையில் நடந்த இந்த சந்திப்பின் போது Alberta மாகாணத்தின் பிரிவினைவாத இயக்கம் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டதாக தெரியவருகிறது.
Alberta, Saskatchewan முதல்குடி தலைவர்கள் உள்ளடக்கிய ஏழு பேர் கொண்ட குழு மன்னரை தனிப்பட்ட முறையில் சந்தித்தது.
இந்த உரையாடலால் உற்சாகமடைந்ததாக கூறிய Alberta முதல் குடிகளின் தலைவர், தமது கவலைகள் மன்னரினால் செவிமடுக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும் கூறினார்.
Alberta பிரிவினை குறித்த பேச்சு உருவாக்கும் பிரிவினை குறித்து இந்த சந்திப்பில் பெரும் கவனம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரிவினவாத இயக்கத்தைக் கண்டிக்குமாறு முதல் குடிகளின் தலைவர்கள் Alberta முதல்வரை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
