தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய “express entry” பிரிவை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

கனடாவில் சுகாதாரப் பணியாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட கனடிய பணி அனுபவத்தைப் பெற்ற சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை இந்தப் புதிய நடவடிக்கைகள் குறிவைக்கின்றன.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் விவாதிக்க Trudeau உறுதி

Lankathas Pathmanathan

Andrea Horwath வகித்த பதிவுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment