தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய “express entry” பிரிவை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

கனடாவில் சுகாதாரப் பணியாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட கனடிய பணி அனுபவத்தைப் பெற்ற சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை இந்தப் புதிய நடவடிக்கைகள் குறிவைக்கின்றன.

LJI Reporter ரம்யா சேது

Related posts

March மாதம் 18ஆந் திகதி அறிவிக்கப்பட்ட கனடிய அரசின் COVID-19 பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தின் சாராம்சம் | (English version below)

thesiyam

June மாத இறுதிக்குள் 24.5 மில்லியன் கனடியர்களுக்கு முழுமையாக தடுப்பூசியை வழங்க முடியும்

Lankathas Pathmanathan

Salmonella காரணமாக 5 மாகாணங்களில் 61 பேர் நோய் வாய்ப்பட்டனர்

Lankathas Pathmanathan

Leave a Comment