February 16, 2025
தேசியம்
செய்திகள்

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

16 ஆண்டுகளில் கடந்த வருடம் மிக அதிகமான குழு வன்முறை தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது

2021ஆம் ஆண்டில் கொலைகள் அதிகரித்துள்ளதாகவும், அவற்றில் கால் பகுதி குழு வன்முறை தொடர்பானவை எனவும் புள்ளிவிவரத் திணைக்கள தரவுகள் காட்டுகின்றன.

கடந்த ஆண்டு மொத்தம் 788 கொலைகள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.

இது 2020ஆம் ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமானதாகும்.

இவற்றில் 184 கொலைகள் குழு வன்முறை தொடர்பானவையாகும்.

இது 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் குழு வன்முறை தொடர்பான கொலைகளின் அதிகபட்ச விகிதத்தைக் குறிக்கிறது.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளரின் நியமனம் கேள்விக்குள்ளானது

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

கனடாவின் emission அளவுகள் 2021இல் அதிகரிப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment