தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கனடா

வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய குடியேற்ற நடவடிக்கைகளை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்தது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் இந்த அறிவித்தல் திங்கட்கிழமை (08) வெளியானது.

குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Lena Metlege Diab ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களுக்கான புதிய “express entry” பிரிவை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.

கனடாவில் சுகாதாரப் பணியாளர்களின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியாக இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருட கனடிய பணி அனுபவத்தைப் பெற்ற சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை இந்தப் புதிய நடவடிக்கைகள் குறிவைக்கின்றன.

LJI Reporter ரம்யா சேது

Related posts

இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையை எதிர்த்து போராடுவதற்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிக்கு ஆதாரவு தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

உயர்மட்ட Liberal  அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan

Leave a Comment