இலையுதிர் கால நேர மாற்றம் November 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வருகிறது.
அன்று கனடியர்கள் கடிகாரங்களை ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர்த்துவார்கள்.
இந்த பல தசாப்த கால நடைமுறை குறித்து விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
இந்த நடைமுறையை நிறுத்தக் கோரும் ஒரு தனிநபர் சட்டமூலம் இந்த மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
C-248 என்ற இந்த சட்டமூலத்தை, Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Marie-France Marie-France Lalonde முன்வைத்துள்ளார்.
நேர மாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிறுவும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க, மாகாண, பிராந்திய, பூர்வீக அதிகாரிகளுடன் ஒரு மாநாட்டை நடத்துமாறு இந்த சட்டமூலம் மத்திய அரசாங்கத்தை கோருகிறது.
