தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி அறிமுகம்: Theresa Tam

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு விரைவில் ஆபத்து மதிப்பீட்டு கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இந்த தகவலை வெளியிட்டார். முழுமையாக  தடுப்பூசி பெற்ற கனேடியர்கள் பாதுகாப்பாக என்ன செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசனை விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தடுப்பூசிகளை பெற்ற காரணத்தால் மாத்திரம் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அகற்ற முடியாது எனவும் Tam எச்சரித்தார்.

முழுமையாக தடுப்பூசி பெற்ற பின்னர் கனேடியர்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தகுதிவாய்ந்த கனேடியர்களில் 23 சதவீதமானவர்கள் பேர் இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.  76 சதவீத கனடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

Related posts

வதிவிட பாடசாலைகளில் நிகழ்ந்தவை இனப்படுகொலை: நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் முழு அளவிலான வணிக மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் திறப்பு

Lankathas Pathmanathan

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment