Manitoba மாகாண காட்டுத்தீயில் சிக்கி ஒரு ஆணும் பெண்ணும் மரணமடைந்தனர்.
கட்டுப்பாடற்ற காட்டுத்தீ அவர்கள் வாழும் நகராட்சி முழுவதும் பரவியதாக தெரியவருகிறது.
செவ்வாய்க்கிழமை, அந்தப் பகுதியில் மக்கள் சிக்கி உள்ளதாக RCMP-க்கு தகவல் கிடைத்தது.
ஆனாலும் கடுமையான நிலைமைகள் காரணமாக உதவி பிரிவினர் சம்பவ இடத்தை சென்றடையவில்லை என தெரியவருகிறது.
புதன்கிழமை காலை ஒரு ஆண், ஒரு பெண்ணின் உடல்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டன.
இதில் இறந்தவர்கள் Sue – Richard Nowell தம்பதியினர் என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களை கௌரவிக்கும் வகையில் Manitoba சட்டமன்றத்தில் கொடிகள் வியாழக்கிழமை அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
பலியானவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு Manitoba முதல்வர் Wab Kinew இரங்கல் தெரிவித்தார்.
Manitoba மாகாணத்தில் காட்டுத்தீ கடும் சேதங்களை ஏற்படுத்திய வருகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி, மாகாணத்தில் 21 தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
இந்தத் தீயை கட்டுப்படுத்துவதில் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளதாக Manitoba காட்டுத்தீ சேவை தெரிவித்துள்ளது.
Whiteshell Provincial பூங்கா, வியாழன் காலை 9 மணி முதல் குறைந்தது May 21 வரை பொதுமக்கள் பாவனைக்கு மூடப்பட்டுள்ளது.
