தேசியம்
செய்திகள்

Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட் டார்?

NATO நாடாளுமன்றக் கூட்டத்திற்காகச் சென்றிருந்தபோது, தான் தாக்கப்பட்டதாக Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

Brussels நகரில் நடைபெற்ற NATO நாடாளுமன்றக் கூட்டத்தில் Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Simon-Pierre Savard-Tremblay பங்கேற்றிருந்தார்.

அங்கு சென்றிருந்தபோது, தான் தாக்கப்பட்டதாக Simon-Pierre Savard-Tremblay தெரிவித்தார்.

இந்த வாரம் செவ்வாய்கிழமை (17) தாக்கப்பட்ட தன்னிடமிருந்து கடிகாரம் திருடப்பட்டதை Saint-Hyacinthe-Bagot-Acton தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Simon-Pierre Savard-Tremblay கூறினார்.

இதில் தனக்கு காயம் ஏற்படவில்லை என கூறும் அவர், வெளிநாடுகளுக்கு செல்லும்போது கனடியர்களை மிகவும் எச்சரிக்கையாக இருக்க அவர் வலியுறுத்துகிறார்.

மூவரால் தாக்கப்பட்ட இந்த சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததாகவும் அவர் கூறினார்.

Brussels -சில் கனடிய தூதரகத்திலும், கனடிய நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவினரிடமும் இந்த சம்பவம் குறித்து அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.

Related posts

பாதசாரிகளை வாகனத்தால் மோதியது பயங்கரவாத செயல் அல்ல

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: கனடாவின் முதலாவது வெள்ளிப் பதக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment