தேசியம்
செய்திகள்

காணி அபகரிப்பு தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க கனடாவிடம் வலியுயுறுத்தல்!

காணி அபகரிப்பை நோக்கமாகக் கொண்ட அறிவித்தலை மீளப்பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு கனடா உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழ்த் தேசியப் பேரவையினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இலங்கைக்கான கனடியத் தூதுவரை தமிழ்த் தேசியப் பேரவையினர் புதன்கிழமை (14) சந்தித்தனர்.

கொழும்பில் நிகழ்ந்த இந்த அவசர சந்திப்பில், காலத்துக்குக் காலம் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்த காணி சுவீகரிப்புகள் குறித்த விரிவான விபரங்கள் கனடிய தூதருக்கு எடுத்து கூறப்பட்டது.

சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் கையகப்படுத்தியுள்ள காணிகள் குறித்த விபரங்களும் புள்ளி விபரங்களுடன் எடுத்துக் கூறப்பட்டது.

Related posts

Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை

Gaya Raja

இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் கண்டனம்

Lankathas Pathmanathan

மலையகத் தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கான கனடியத் தமிழர் நிதிசேர் நடையில் $55 ஆயிரம் சேகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment