September 26, 2023
தேசியம்
செய்திகள்

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

British Columbiaவில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து  215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
வியாழக்கிழமை Kamloops நகரில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 1978இல் மூடப்பட்ட Kamloops குடியிருப்பு பாடசாலையின் மாணவர்கள் என தெரியவருகிறது.

இந்த கண்டுபிடிப்பை வியாழக்கிழமை Tk’emlups te Secwepemc First Nationஇன் தலைவர் அறிவித்தார். இது கனடாவின் வரலாற்றின் வெட்கக்கேடான அத்தியாயத்தை நினைவூட்டுவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

மீட்கப்பட்ட சில எச்சங்களில்  மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்களின் மரணங்கள் எப்போது நிகழ்ந்தது மற்றும் இவர்களின் இறப்புக்கான காரணங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

Related posts

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja

உக்ரேனிய படைகளுடன் போரில் ஈடுபட்ட கனடியர் மரணம்

Lankathas Pathmanathan

முன்னாள் வதிவிட பாடசாலைகளில் கண்டுபிடிக்கப்படும் கல்லறைகள் கனடாவின் பொறுப்பு: பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!