தேசியம்
செய்திகள்

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

British Columbiaவில் உள்ள முன்னாள் குடியிருப்புப் பாடசாலையின் புதைகுழியில் இருந்து  215 பழங்குடி குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
வியாழக்கிழமை Kamloops நகரில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலையில் இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 1978இல் மூடப்பட்ட Kamloops குடியிருப்பு பாடசாலையின் மாணவர்கள் என தெரியவருகிறது.

இந்த கண்டுபிடிப்பை வியாழக்கிழமை Tk’emlups te Secwepemc First Nationஇன் தலைவர் அறிவித்தார். இது கனடாவின் வரலாற்றின் வெட்கக்கேடான அத்தியாயத்தை நினைவூட்டுவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

மீட்கப்பட்ட சில எச்சங்களில்  மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது. இவர்களின் மரணங்கள் எப்போது நிகழ்ந்தது மற்றும் இவர்களின் இறப்புக்கான காரணங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

Related posts

Liberal அரசாங்கத்தின் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan

Leave a Comment