தேசியம்
செய்திகள்

Sicily புயலில் காணாமல் போன கனடியர் மரணம்

Sicily புயலில் காணாமல் போன ஆறு பேரில் கனடிய ஒருவரும் அடங்குவதாக தெரியவருகிறது.

காணாமல் போனதாக கூறப்படும் கனடியர் மரணமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடுமையான புயலின் போது சொகுசு விசைப்படகு Sicilyயில் மூழ்கியதில் கனடியர் ஒருவர் மரணமடைந்தார் என்பதை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக திங்கட்கிழமை (19) பிற்பகல் வெளியான ஒரு அறிக்கையில் கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

தனியுரிமைக் காரணங்களால் மேலதிக தகவல்களை வெளியிட கனடிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.

Related posts

கனடாவில் திங்கட்கிழமை 1,232 COVID தொற்றுகள் பதிவு!

Gaya Raja

GO புகையிரதத்தின் கூரையில் இருந்து விழுந்த 15 வயது சிறுவன்

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் வேட்பாளருக்கு எதிராக கொலை அச்சுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment