தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய $10 மில்லியன் உதவி வழங்கும் கனடா

இஸ்ரேல், காசாவில் அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய 10 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை கனடா வழங்குகிறது.

பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (12) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

அவசர தேவைகளை நிவர்த்தி செய்ய இந்த உதவி வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார்.

அனுபவம் வாய்ந்த, நம்பகமான மனிதாபிமான பங்காளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் என கனடாவின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார்.

தற்போதைய இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுத்தியிருக்கும் பயங்கரமான பேரழிவின் தாக்கம் குறித்து Trudeau கவலை தெரிவித்தார்.

ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என மீண்டும் வலியுறுத்திய கனடிய பிரதமர், அது இஸ்ரேலை ஆக்கிரமிக்கத் தேர்ந்தெடுத்துள்ளது என கூறினார்.

ஹமாஸ் பாலஸ்தீன மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என பிரதமர் Justin Trudeau குறிப்பிட்டார்.

Related posts

10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் COVID காரணமாக வைத்தியசாலைகளில்

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

சீன இராஜதந்திரிகளை வெளியேற்றுவது குறித்து ஆராயும் கனடா?

Lankathas Pathmanathan

Leave a Comment