September 14, 2026
தேசியம்
செய்திகள்

காசா எல்லைக்கு அருகில் கனடியர் சுட்டுக் கொலை

காசா எல்லைக்கு அருகே கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இவர் இஸ்ரேலிய படையினரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா எல்லையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரை கத்தியைக் காட்டி மிரட்டிய கனடியர் ஒருவர் திங்கட்கிழமை (22) கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள நகரத்தின் நுழைவாயிலுக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர், கத்தியுடன் பாதுகாப்புப் படையினரை அணுகினார் என இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

இஸ்ரேலிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த நபரைக் கொன்றனர்.

இந்தச் சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதில் பலியானவர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan

தமிழர் உட்பட 34 வீடு விற்பனை முகவர்கள் தேர்வில் மோசடி செய்ததற்காக வீடு விற்பனை உரிமையை இழந்தனர்!

Lankathas Pathmanathan

41 தூதரக அதிகாரிகளை மீளப்பெற கனடாவிடம் இந்தியா வலியுறுத்தல்?

Lankathas Pathmanathan

Leave a Comment