தேசியம்
செய்திகள்

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Rexdale நகரில் இந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மரணமடைந்தார்.

Rexdale நகரில் North Albion உயர்நிலைப் பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார் – நால்வர் காயமடைந்தனர்.

இவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக Toronto காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பலியான இரண்டாவது நபரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை.

ஆனாலும் இவர் 46 வயதான Seymour Gibbs என குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

சம்பவ தினத்தன்று 61 வயதான Delroy “George” Parkes இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து மரணமானார்.

காவல்துறையினரின் விசாரணை தொடரும் நிலையில் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எதையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.

இந்த துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்திருக்கலாம் எனவும் இதனுடன் தொடர்புடைய  வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

கனடாவில் தமிழ் இனப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Lankathas Pathmanathan

Via புகையிரத வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan

Leave a Comment