தேசியம்
செய்திகள்

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைகிறது

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை குறைத்தது.

மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது.

புதன்கிழமை (05) மத்திய வங்கி இந்த முடிவை அறிவித்தது.

அடிப்படை பணவீக்கம் ஒரு நிலையான அளவில் தளர்த்தப்படுகிறது என்பதற்கு மத்திய வங்கி இப்போது போதுமான ஆதாரங்களைக் காண்கிறது என மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார்.

இந்த அறிவிப்பு வட்டி விகிதத்தை 4.75 சதவீதமாக்கிறது.

கடந்த ஆண்டு July மாதத்தில் இருந்து வட்டி விகிதம் 5 சதவீதமாக உள்ளது

மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை March 2022 இல் அதிகரிக்க ஆரம்பித்தது

எதிர்பார்த்ததை விட அதிகரித்த பணவீக்கத்தைத் தொடர்ந்து, இந்த அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது

அடுத்த வட்டிவிகித அறிவிப்பு July 24.ஆம் திகதி தி திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

இறுதி அறிக்கையை வெளியிட்டார் David Johnston

Lankathas Pathmanathan

கனடிய ஆயுதப்படை உறுப்பினர் Latvia-வில் மரணம்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை கலைக்கப்படுகிறது!

Lankathas Pathmanathan

Leave a Comment