தேசியம்
செய்திகள்

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில்!

Ottawaவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 6 பேரை கொன்ற குற்றத்தில் 19 வயதான Febrio De-Zoysa கைதானார் .

இவர் பாதுகாப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் Ewan Lyttle கூறினார்

கைதிகள் ஏனைய கைதிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக பெரும்பாலும் பாதுகாப்புக் காவலில் வைக்கப்படுவது வழமையாகும்.

Febrio De-Zoysa மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக அவர்  நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீண்டும் March 28ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்

இந்த கொலைகளுக்கான காரணத்தை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.

குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனடியர்களை சூடானில் இருந்து வெளியேற்றும் விமானங்கள் நிறுத்தம்

Lankathas Pathmanathan

இத்தாலி கனடியர்களிடம் மன்னிப்பு கோரிய கனடிய பிரதமர்

Gaya Raja

மூன்று மாகாணங்களில் கடுமையான பனி பொழிவு எச்சரிக்கை

Leave a Comment