தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசி- இரத்த உறைவால் New Brunswickகில் இரண்டாவது மரணம்!

AstraZeneca தடுப்பூசியினால் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக New Brunswickகில் வெள்ளிக்கிழமை இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.

April மாதம் 11ஆம் திகதி தனது முதலாவது AstraZeneca தடுப்பூசியை பெற்ற 50 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளார். இவர் 17 நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும் AstraZeneca  தடுப்பூசியுடன் தொடர்புடைய அபாயங்கள் அரிதானவை என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் New Brunswick மாகாண தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Jennifer Russell கூறினார்.

அதேவேளை குறைந்தது எட்டு வாரங்களுக்கு முன்னர்  AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்ற 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற தகுதியுடையவர்கள் என  New Brunswick மாகாணம் அறிவித்தது.

New Brunswick, May மாதம் 31ஆம் திகதி காலாவதியாகும் 3,500 AstraZeneca தடுப்பூசிகளை தன்வசம் கொண்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது 

Related posts

புற்றுநோய் சிகிச்சைக்காக அரசியலில் இருந்து விலகும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

சட்டவிரோத துப்பாக்கிகள் குறித்த விசாரணையில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் முயற்சியில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment