தேசியம்
செய்திகள்

இரத்து செய்யப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்

Ottawaவில் தொடரும் காவல்துறையினரின் நடவடிக்கையின் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இரத்து செய்யப்பட்டன.

இதன் காரணமாக வெள்ளியன்று இரண்டாவது நாளாகவும் தொடர இருந்த அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த விவாதமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அவசரகாலச் சட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது

நாடாளுமன்ற பாதுகாப்பு பிரிவின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற அமர்வுகளை இரத்து செய்ய அனைத்துக் கட்சிகளும் வியாழன் இரவு ஒப்புக்கொண்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்தது.

சனிக்கிழமை விவாதத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் .

Related posts

சர்வதேச பயணிகளுக்காக புதிய COVID பரிசோதனைத் திட்டம்

Lankathas Pathmanathan

Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் நீதன் சான் வேட்பு மனு தாக்கல்!

Lankathas Pathmanathan

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

Lankathas Pathmanathan

Leave a Comment