தேசியம்
செய்திகள்

தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுகிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

COVD தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார்.

ஆனால் சுகாதார நடவடிக்கைகள் எளிதாக்கப்படுவதால் மீண்டும் தொற்றுகளின் அதிகரிப்பு சாத்தியமாகும் என அவர் எச்சரித்தார்

நெருக்கடி நிலையிலிருந்து வெளியறும் நிலையில், தொற்றின் தடுப்புக்கான முக்கிய நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தற்போது கனடியர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு அதிகம் உள்ளது என Tam விளக்கினார்.

பொது சுகாதார நடவடிக்கைகள் இல்லாமல் முன்னோக்கி சென்று தொற்றை எதிர்கொள்ளும் நிலையில் கனடா உள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும்: Poilievre கோரிக்கை

Lankathas Pathmanathan

Quebec மாகாணத்தில் தொடரும் முடக்க நடவடிக்கைகள்!

Gaya Raja

COVID காரணமாக மரணமடைந்தவர்கள் 92.8 சதவீதமானவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment