தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது!

நடைபெறவுள்ள தேர்தலில் சில மாகாணங்கள் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அனுமதிக்காது என தெரியவருகின்றது.

கனடா முழுவதும் COVID தொற்றின் நான்காவது அலை உருவாகியுள்ள நிலையில், சில மாகாணங்கள் தேர்தல் நாளில் பாடசாலைகளில் வாக்குச்சாவடி மையங்களை அமைக்க அனுமதிக்கும் வழக்கமான நடைமுறையை மறுபரிசீலனை செய்கின்றன.

இந்த தேர்தலில் பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை அமைக்க விரும்பவில்லை என Manitoba மாகாணம் அறிவித்துள்ளது.

New Brunswick மாகாணமும் இம்முறை பாடசாலைகளில் வாக்குச்சாவடிகளை வைக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.

Newfoundland and Labradorரில் வாக்குச் சாவடிகளாக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நடைமுறை COVID தொற்றுக்கு நீண்ட காலத்திற்கு முன்னரே அமுலில் இருந்தது.

உள்ளூர் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் வரை, பாடசாலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பாடசாலை அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும் என Alberta கூறுகிறது.

இது குறித்து பொது சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக British Colombiaவின் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan

COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும்

Lankathas Pathmanathan

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

Leave a Comment