9/11 தாக்குதலுக்கு பின்னர் 25 ஆண்டுகள் கடந்தும், கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை (Islamophobia ) எதிர்கொள்ளும் பணி இன்னும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, சமூகப் பாகுபாடு, கண்காணிப்புகள் இன்னும் தொடர்வதாக சமூக ஆர்வலர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசாங்கம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை எதிர்ப்பதற்கான சிறப்பு பிரதிநிதி அலுவலகத்தைக் கலைத்துவிட்டு ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை எதிர்ப்பதற்காக 2023-ஆம் ஆண்டு Amira Elghawaby தலைமையில் ஒரு சிறப்புப் பிரதிநிதி அலுவலகம் Justin Trudeau அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Mark Carneyஅரசு இந்த அலுவலகத்தை கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக பொதுவான ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்தது.
இந்த நடவடிக்கை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை எதிர்கொள்வதில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய கனடிய இஸ்லாமிய கவுன்சில் (NCCM) போன்ற அமைப்புகள் விமர்சித்துள்ளன
அரசின் இந்த முடிவானது இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தடுக்கும் பொறுப்பை அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல், மீண்டும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீது சுமத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
