குடியுரிமைக்கான சான்று (Proof-of-citizenship) பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் இந்த சான்றுகளை பெறுவதற்கான மதிப்பிடப்பட்ட காத்திருப்பு காலம் 3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல், வெளிநாடுகளில் பிறந்து தங்களின் பெற்றோர் மூலம் கனடிய குடியுரிமைக்கு தகுதிபெறும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைக் காலமாக இந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குடியுரிமைக்கான சான்று கோரி விண்ணப்பித்து, தங்களின் முடிவுக்காக 136,000-க்கும் அதிகமான மக்கள் தற்போது காத்திருக்கின்றனர் என குடிவரவுத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மதிப்பிடப்பட்ட காத்திருப்பு காலம் தற்போது 33 மாதங்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
கனடாவின் தற்போதைய சர்வதேச குடியேற்றக் கொள்கை மாற்றங்களும், மக்கள் தங்கள் குடியுரிமையை பாதுகாத்துக் கொள்ள காட்டும் அவசரமும் இந்த அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயணிகளும் விண்ணப்பதாரர்களும் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
கனடிய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சகம் (IRCC) இந்த தேக்க நிலையை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
