இந்திய-கனடா இடையிலான முதலாவது பொருளாதார, நிதிசார் கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா வந்தடைந்தார்.
கனடாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை (25) Toronto வந்தடைந்தார்.
கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான ஒன்பது நாள் அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக அவர் Toronto வந்தடைந்தார்.
உலக அளவில் இந்தியாவும் கனடாவும் “மிகவும் இயல்பான கூட்டாளிகள்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக உறவுகளையும் ஆழமான முதலீட்டுத் தொடர்புகளையும் வலுப்படுத்த இந்தப் பயணத்தை நிர்மலா சீதாராமன் பயன்படுத்துவார் என கூறப்படுகிறது.
நான்கு நாட்கள் கனடாவில் தங்கியிருக்கும் அவர், கனடிய அரச தரப்புடன் அதிகாரப்பூர்வ உரையாடலில் ஈடுபடவுள்ளார்.
கனடாவின் நிதியமைச்சர் François-Philippe Champagne -னுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு நடத்த ஏற்பாடாகியுள்ளது.
