September 1, 2026
தேசியம்
செய்திகள்

ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு தீயணைப்பு படையினர் கனடாவில்

கனடாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான அமெரிக்க தீயணைப்பு படையினர் அண்மையில் கனடாவை வந்தடைந்தனர்.

மேலும் பலர் விரைவில் கனடாவை வந்தடைய உள்ளனர்.

கனடாவில் எரிந்து வரும் தீயை அணைக்கும் பணியில் 600க்கும் மேற்பட்ட அமெரிக்க தீயணைப்பு படையினரும், பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 1,000 தீயணைப்பு படையினர் கனடாவில் உள்ளனர்.

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவ பிரான்சில் இருந்து மேலதிக தீயணைப்பு படையினர் எதிர்பார்க்கப்படுகின்றன.

Related posts

Ontario NDP துணைத் தலைவர் மத்திய Liberal கட்சியின் வேட்பாளரானார்

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வரும் Bloc Québécois?

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை குறித்த கனடிய பிரதமர் அறிக்கைக்கு இலங்கை அரசு கண்டனம்

Leave a Comment