காவல்துறை அதிகாரி தொடர்பான துப்பாக்கிச்சூடு மரணம் குறித்து சிறப்பு விசாரணைப் பிரிவு (SIU) விசாரித்து வருகிறது.
திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் Mercedes வாகனத்தின் ஓட்டுநர், Toronto காவல்துறையினரால் சுடப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது.
Mississauga நகரில் காவல்துறையினர் ஈடுபட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஒருவர் உயிரிழந்ததாகவும், மூவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Toronto காவல்துறை விசாரணை நடத்தி கொண்டிருந்தபோது, வியாழக்கிழமை (06) நள்ளிரவு 12:30 மணிக்கு சற்று முன்னதாக ஒரு அதிகாரி தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நிகழ்ந்ததாக Peel காவல்துறை சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது.
ஒரு ஆண் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானதாகவும், மற்றொருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தனது விசாரணையை ஆரம்பித்துள்ள சிறப்பு விசாரணைப் பிரிவு, இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் உயிரிழப்பில் முடிந்துள்ளதை உறுதிப்படுத்தியது.
இதில் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒரு காவல்துறை உறுப்பினர் சிறிய காயங்களுக்கு உள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வியாழன் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய SIU செய்தித் தொடர்பாளர், புதன்கிழமை (05) திருடப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்ட வாகனம் ஒன்றை Toronto காவல்துறையினர் பின் தொடர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.
இந்த விசாரணையில் அடையாளம் காணும் குறியீடுகள் இல்லாத காவல் துறையின் ஐந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
Mercedes வாகனத்தில் இருந்த, காயமடையாத மூவர் காவலில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து காவல்துறை தகவல் எதையும் வெளியிடவில்லை.
