Toronto அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு சந்தேக நபர்கள், பணத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும்’ (gun-for-hire) குழுவைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Toronto நகர மையத்தில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலையில் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதை Toronto காவல்துறையின் தலைமை அதிகாரி Myron Demkiw வியாழக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இரண்டு சந்தேக நபர்களும், ‘பணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தும்’ (gun-for-hire) ஒரு குழுவின் அங்கமாக இச்செயலைச் செய்யப் பணம் பெற்றிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு குற்றச்சாட்டுகளை சந்தேக நபர்கள் எதிர் கொள்வதாகவும், அவர்களில் ஒருவர் 15 வயதுடையவர் எனவும் Myron Demkiw கூறினார்.
இளம் பருவக் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிகளின் படி, 15 வயதுடைய சந்தேக நபரின் பெயரை வெளியிட முடியாத நிலையில், இரண்டாவது சந்தேக நபர் 19 வயதான Xen-Ul-Abdeen Syed என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டார்.
முன்னரும் அமெரிக்கத் தூதரகம் மீது March 10-ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த இரண்டு சம்பவங்களுக்குப் பின்னாலும் ஒரே உள்ள நோக்கம் இருப்பதாக Myron Demkiw கூறினார்.
மறைக்குறியீடு செய்யப்பட்ட செய்திப் பரிமாற்ற செயலிகள் (encrypted messaging apps) வாயிலாக, இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு இரண்டு சந்தேக நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக காவல்துறையினர் நம்புகின்றனர்.
இந்தக் குற்றவியல் வலைப்பின்னலுக்கு பின்னால் உள்ளவர்கள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் முக்கிய கவனம் செலுத்தப்படுவதாக Myron Demkiw செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
March 10 அன்று துணைத் தூதரகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், முன்னதாகவே கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் கைதான சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
