September 14, 2026
தேசியம்
செய்திகள்

தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் அவதூறு நடவடிக்கை நிராகரிப்பு

தடுப்பூசி எதிர்ப்பாளர்களான செவிலியர்களின் ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கையை Ontario நீதிபதி நிராகரித்தார்.

மூன்று செவிலியர்கள் இந்த ஒரு மில்லியன் டொலர் அவதூறு நடவடிக்கை வழக்கை பதிவு செய்தனர்.

இந்த செவிலியர்கள் தொற்றின் போது தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களுக்காக ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டனர்.

இந்த வழக்கை ஆச்சரியமானது என நீதிபதி தனது முடிவில் தெரிவித்தார்.

வாதிகள் போதுமான அளவு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்த தவறிவிட்டனர் என தனது முடிவில் மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

பிரதிவாதிகள் மீது வழக்குத் தொடரும் வாதிகளின் முடிவும் நீதிபதியினால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

Related posts

Air இந்தியா விமான குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் British Colombiaவில் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

Ottawaவில் ஆறு மணி நேரத்தில் 100 மில்லி மீற்றர் மழை!

Lankathas Pathmanathan

Leave a Comment