மதுபான விற்பனைக்கான தடைகளை குறைக்க மாகாணங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
மாகாணங்களுக்கு இடையிலான மதுபான விற்பனைக்கான ஒரு முக்கிய தடையை நீக்கியுள்ளதாக மாகாண முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதியின் இறக்குமதி வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த அறிவித்தல் வெளியானது.
ஒன்பது மாகாண முதல்வர்கள் செவ்வாய்க்கிழமை (21) சந்தித்து, மாகாணங்களுக்கு இடையிலான மதுபான விற்பனையில் இருந்த ஒரு முக்கியத் தடையை நீக்க ஒப்புக்கொண்டனர்.
இதன்மூலம், மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த மாகாணத்திற்கு வெளியே உள்ள நுகர்வோருக்கு நேரடியாக தமது உற்பத்திகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
செவ்வாயன்று ஆரம்பித்த மாகாண முதல்வர்கள் கூட்டம் மூன்று தினங்கள் தொடர்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரி அறிவித்தல் இந்த முதல்வர்கள் கூட்டத்தின் கவனத்தை மாற்றியமைத்துள்ளது.
