அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளதாக கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்தார்.
கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் செவ்வாய்க்கிழமை (21) காலை உரையாடினர்.
கனடியப் பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீண்டும் வரி விதிப்பதாக அச்சுறுத்தி வரும் சூழலில், இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதியுடனான உரையாடலின் போது “வரும் வாரங்களில் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்த” இருவரும் ஒப்புக் கொண்டதாக Mark Carney தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க உள்ளது Mark Carney கூறினார்.
கனடாவுக்கு எதிரான தனது வர்த்தக போரை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, கனடாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீது 50 சதவீத வரி விதிக்கும் மூன்று அறிவிப்பாணைகளில் Donald Trump திங்கட்கிழமை (20) கையெழுத்திட்டார்.
அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு எதிராக கனடா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈடுசெய்ய இந்த வரிகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer கூறினார்.
இந்த நிலையில் CUSMA ஒப்பந்தத்தை மீறும் வகையில் கனடாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளின் தொடர் இது என சமீபத்திய சுங்கவரி அச்சுறுத்தலை செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய Mark Carney வகைப்படுத்தினார்.
எம்மால் கட்டுப்படுத்தக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துவதே கனடாவின் முதன்மை நோக்கம் என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் புதிய வரிகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அதற்கான சாத்தியமான எதிர் நடவடிக்கை குறித்த வழிமுறைகளை கனடிய மத்திய அரசு ஆராயும் எனவும் பிரதமர் கூறினார்.
அமெரிக்காவின் புதிய வரிகள் 29 நாட்களில் நடைமுறைக்குது வரவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
