Mississauga நகர வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்தனர்.
401-வது நெடுஞ்சாலையில் புதன்கிழமை (15) இந்த விபத்து நிகழ்ந்தது.
Dixie வீதிக்கு அருகில் காலை 9 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும், மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காவல்துறை சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் Cambridge நகரைச் சேர்ந்த 80 வயது ஆண், 53 வயது பெண் என Ontario மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
இவர்கள் பயணித்த வாகனத்தின் ஓட்டுநர், மற்றொரு பயணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களின் வாகனத்தை மோதிய வாகனத்தின் ஓட்டுநர் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை அல்ல என OPP தெரிவித்தது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றசாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.
