Venezuela-விற்கான மனிதாபிமான உதவிகளை வழங்க தயாராகி வருவதாக கனடிய பிரதமர் கூறினார்.
புதன்கிழமை (24) மாலை Venezuela-வைத் இரண்டு பலமான நிலநடுக்கங்கள் தாக்கின
இதில் உயிரிழந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக Mark Carney தனது X தளத்தில் பதிவிட்டார்.
காயமடைந்த அல்லது இடம்பெயர்ந்த அனைவருடனும், உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்துக் கொண்டிருக்கும் அவசரக் கால மீட்பு பணியாளர்களுடன் தனது எண்ணங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Venezuela-வை தாக்கிய 7.2 , 7.5 richter அளவு கொண்ட நில நடுக்கங்கள், கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் அந்த நாட்டைத் தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கங்களாகும்.
இதில் குறைந்தது 164 பேர் உயிரிழந்ததாகவும், 971 பேர் காயமடைந்ததாகவும் Venezuela-வின் இடைக்கால ஜனாதிபதி Delcy Rodríguez வியாழக்கிழமை (25) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் கனடியர்கள் எவரும் உள்ளனரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் தகவல் எதையும் இதுவரை வெளியிடவில்லை.
