அதிகரித்து வரும் e-scooter விபத்துக்கள் குறித்து குழந்தைகள் மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கனடாவின் இரண்டு குழந்தைகள் மருத்துவமனைகள், மின்சார scooter-கள் ஏற்படுத்தும் விபத்துகள் குறித்து பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
இதனால் ஏற்படக்கூடிய விபத்துகளின் அபாயங்களைக் கருத்தில் கொள்ளுமாறு இந்த மருத்துவமனைகள் எச்சரித்துள்ளன.
இதனால் கடுமையான காயங்கள் ஏற்றப்படுகின்றன என Montreal குழந்தைகள் மருத்துவமனையின் காயத் தடுப்பு பிரிவின் இயக்குநர் Debbie Friedman தெரிவித்தார்.
இந்தக் கருத்தை எதிரொலித்த BC குழந்தைகள் மருத்துவமனை e-scooter காயங்களால் தமது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானோர் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என கூறுகிறது.
Québec மாகாணத்தில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு e-scooter பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது.
அநேகமான ஏனைய மாகாணங்களில் இந்த அனுமதி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இருப்பினும், e-scooter தொடர்புடைய விபத்துக்களினால் குறிப்பிடப்பட்ட இந்த வயதை விட இளைய வயதினர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
e-scooter விபத்துக்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிவதில்லை எனவும் 59 சதவிகிதத்தினர் வேக வரம்பை மீறி பயணிக்கின்றனர் எனவும் BC குழந்தைகள் மருத்துவமனையின் Dr. Shelina Babul கூறினார்.
கிழக்கு Ontario குழந்தைகள் மருத்துவமனையின் புள்ளிவிவரங்களின்படி, e-scooter காயங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைகள் 2023-24-இல் 18 ஆக இருந்ததிலிருந்து 2024-25-இல் 36 ஆக பதிவாகி, 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
E-scooter விபத்துக்களால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், சிறுவர்கள் மேலும் கடுமையான பாதிப்புகளையும் சந்திப்பதாகவும் Montreal குழந்தைகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
