Toronto நகர மையத்தில் போதைப்பொருள் பயன்பாட்டில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.
Toronto பொது சுகாதாரத் துறை இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.
வெள்ளிக்கிழமை (19) Toronto நகரின் மையப்பகுதியில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தது பதிவானதை தொடர்ந்து, பொது சுகாதாரத் துறை குடியிருப்பாளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதில் எந்த போதைப்பொருள் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதை சுகாதார அதிகாரிகள் குறிப்பிடவில்லை.
எத்தனை பேர் அளவுக்கு அதிகமான போதை பொருள் பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றோ அல்லது ஏதேனும் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளனவா என்றோ அதிகாரிகள் கூறவில்லை.
போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டுவதற்காக பொது சுகாதாரத் துறை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொது சுகாதாரத் துறை நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் புதிய தகவல்களை வழங்கும் எனவும் கூறப்படுகிறது.
