தென்னாப்பிரிக்காவின் தேசிய பூங்காவில் கனடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
Kruger தேசியப் பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கனடிய குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டார்.
தேசியப் பூங்காவில் சூரிய அஸ்தமனத்தின்போது இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில் சுடப்பட்டதில், கனடாவைச் சேர்ந்த வயதான சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் பலியானவர் 10 கனடியர்கள் உட்பட 28 பயணிகள் கொண்ட ஒரு பயண குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.
இவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
இதில் இறந்தவரின் மனைவியும் குறிப்பிட்ட பயண குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளார்.
இதில் பலியானவரின் டையாளம் இன்னும் வெளியிடப்படவில்லை.
அவர் ஒரு சிறப்பு தனியார் சுற்றுலாக் குழுவின் ஒரு பகுதியாக அந்தப் பூங்காவிற்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக துப்பாக்கி பிரயோகம் நிகழ்ந்ததில் கனடியர் உயிரிழந்ததாக தென்னாப்பிரிக்க காவல்துறையினர் தெரிவித்தனர்..
துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த ஊழியரை 69 வயதான சுற்றுலாப் பயணி ஒருவர் அணுகி, அது உண்மையான துப்பாக்கியா என கேட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அது ஒரு உண்மையான துப்பாக்கி என ஊழியர் செயல் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி வெடித்து, தோட்டா சுற்றுலாப் பயணியின் உடலில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது .
இதில் கனடியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனாலும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய இந்த சம்பவம் குறித்த விவரம் தேசியப் பூங்காவில் உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பிரதிபலிக்கவில்லை என இதில் பலியானவரின் நண்பர் கூறினார்.
யானைகளையும் காண்டாமிருகங்களையும் கொல்லப் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால், தனது நீண்டகால பயணத் தோழர் கழிவறைக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது தவறுதலாக சுடப்பட்டார் என அவர் கூறினார்.
இதில் பலியானவர் Vancouver நகரை சேர்ந்தவர் என தெரியவருகிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது.
இந்தக் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த சூழ்நிலைகளைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்திற்கு என்ன வழிவகுத்தது என்பதைத் தீர்மானிக்கவும் காவல்துறை ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளது
தென்னாப்பிரிக்காவில் கனடியர் ஒருவர் மரணமடைந்ததை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.
இறந்தவரின் மனைவி மீண்டும் கனடா திரும்ப கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் ஊடாக உதவி பெறுவதாக தெரியவருகிறது.
உள்ளூர் அதிகாரிகள் அனுமதித்தவுடன், பலியானவரின் உடலைக் கனடாவுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தென்னாப்பிரிக்காவில் உள்ள கனடாவின் உயர் ஆணையத்துடன் அவரது மனைவி செய்துள்ளதாகவும் அதற்கான சட்டப்பூர்வ ஆவணங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு 38 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்தத் தகவலை உறுதி செய்யக் கோரியதற்கு உள்ளூர் காவல்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.
